ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் இராசராசேச்சுரம் என்னும் பெருவுடையார் கோவிலை அருண்மொழிவர்மனாம் இராசராசசோழன் கட்டியபோது, அக்கோவிலில் சிலைகள், அழகிய கோபுரத்தில் பதித்த கற்கள், இவற்றில் பட்டுத் தெறித்த சிற்பிகளின் உளிகள் எழுப்பிய ஓசைகள் மீண்டும் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஒலித்துள்ளது .
தமிழ்த்தாயின் பேருரு, சிலை வடிவில்!
ஈழத்தில் சிங்களப் பேரினவாதக் கொடியோர் தமிழர்கள் மீது நடத்திய கொடூரமான இனப்படுகொலைக் காட்சிகள் சிலை வடிவில்!
வானில் இருந்து கொத்துக்கொத்தாகத் தமிழர் மீது பாயும் குண்டுகள், உடல்கள் சிதைந்து துடித்து மடியும் தமிழர்கள், தமிழ்ப் பெண்களின் வயிறை பயனைட் கத்திகள் கிழித்துக் கருவில் உருவாகிய பிஞ்சுகள் அழிக்கப்பட்ட கொடூரம் சிலைவடிவில்!
பிறந்த மண்ணை விட்டு கூட்டம், கூட்டமாக முதிர் வயதினரும், பாலகர்களும் உடன் வர, தமிழர்கள் அடைக்கல நிழல் தேடிச் செல்லும் பேரவலம் சிலை வடிவில்!
குண்டுமழை நெருப்பில் துடிதுடித்துத் தமிழர்கள் செத்திடும் துன்பம் சிலைவடிவில்!
-நெருடல் .காம்
-
தமிழ்த்தாயின் பேருரு, சிலை வடிவில்!
ஈழத்தில் சிங்களப் பேரினவாதக் கொடியோர் தமிழர்கள் மீது நடத்திய கொடூரமான இனப்படுகொலைக் காட்சிகள் சிலை வடிவில்!
வானில் இருந்து கொத்துக்கொத்தாகத் தமிழர் மீது பாயும் குண்டுகள், உடல்கள் சிதைந்து துடித்து மடியும் தமிழர்கள், தமிழ்ப் பெண்களின் வயிறை பயனைட் கத்திகள் கிழித்துக் கருவில் உருவாகிய பிஞ்சுகள் அழிக்கப்பட்ட கொடூரம் சிலைவடிவில்!
பிறந்த மண்ணை விட்டு கூட்டம், கூட்டமாக முதிர் வயதினரும், பாலகர்களும் உடன் வர, தமிழர்கள் அடைக்கல நிழல் தேடிச் செல்லும் பேரவலம் சிலை வடிவில்!
குண்டுமழை நெருப்பில் துடிதுடித்துத் தமிழர்கள் செத்திடும் துன்பம் சிலைவடிவில்!
-நெருடல் .காம்
-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக